Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கணிணி ஆசிரியர்களுக்கு  பணிநியமன ஆணை - முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்

ஜனவரி 04, 2021 10:08

.திருநெல்வேலி : கணிணி ஆசிரியர்கள் 28 பேருக்கு பணிநியமன ஆணைகளை  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார். தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், கணணி நிலை-1 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வுகள் மூலம், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும், மாநிலம் முழுவதிலும், மாவட்ட வாரியாக, கலந்தாய்வு நிகழ்வு,  இணையதளம் மூலம், பள்ளிக்கல்வித் துறையினரால்,  நடத்தப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தேர்வான 28 பேருக்கு, பணிநியமன ஆணைகள் வழங்குவதற்கான கலந்தாய்வு, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில்  பணியாற்ற 4 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் பணியாற்ற 11 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் பணியாற்ற 13 பேருக்கும், பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும்,  ஒருங்கிணைந்த  திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவக்குமார்  வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்